
இன்று (Dec-21 ஞாயிறு மார்கழி – 30 ) இரவு 8 மணி, 20 நிமிடம் 20 நொடிக்கு சூரியன் தன் தென் செலவை (தட்சிணாயனம்) முடித்து வட செலவை (உத்திராயணம்) ஆரம்பிக்கிறான். ஒரு குச்சி நட்டு அதன் நிழல் பார்த்தால் , இன்று வரை நீண்டு தினமும் வளர்ந்த நிழலின் நீளம் இனி திரும்பி குருக ஆரம்பிக்கும். கொடி மரங்கள் இதற்காகத்தான் நம் கோயில்களில் இருந்தது. அதன் உண்மைத் தன்மையை நாம் 420 ஆண்டுகளாக இழந்து, மறந்து விட்டோம். இந்த நாளை நாம் போகி பண்டிகையாக கொண்டாடிக் கொண்டு உள்ளோம். நாளை தை – 1 பொங்கல் விழா. மகாபாரதப் போர் வெற்றி விழா. நாளை மறுநாள் தை – 2. மகாபாரத போரை வென்றெடுத்த கிருட்டிணன் நினைவாக மாட்டுப் பொங்கல். தை – 3 மகாபாரத போரில் தோற்ற கோனார்கள், மலையில் வாழ்ந்த நாட்டார்கள், குறவர்களை அரவணைத்து காடுகளில் சென்று பலகாரம் கொடுத்து அழைத்து வரும் காணும் பொங்கல்.
இப்படி மறந்த நம் வாழ்வியலை, நம் வரலாற்றை நினைவு கூறும் வகையில் இந்த போகி, மற்றும் பொங்கல் விழாவினை சிறப்பாக அனைவரும் கொண்டாடி மகிழ அனைவருக்கும், போகி, மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள். 🙏🙏🙏🙏🙏 நன்றி.
Tags: திருவிழா
No Comments