Tag: சிவவாக்கியம்

சிவவாக்கியம் பாடல் 171 – திரும்பி ஆடு

171. திரும்பி ஆடு வாசலெட்டு , திறம் உறைத்த வாசல் எட்டு. மருங்கிலாத கோலம் எட்டு, வன்னி ஆடு வாசல் எட்டு. துரும்பில்லாத கோலம் எட்டு , சுற்றி வந்த மறுவரே. அரும்பிலாத பூவும் உண்டு ஐயன் ஆனை உண்மையே! திரும்பத் திரும்ப உடல் எடுக்க காரணம் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 170 – உதிக்கும் என்ற

170. உதிக்கும் என்ற தெவ்விடம் ? ஒடுங்குகின்ற தெவ்விடம்? கதிக்கு நின்ற தெவ்விடம் ? கண்ணுறக்கம் எவ்விடம் ? மதிக்க நின்ற தெவ்விடம் ? மதிமயக்கம் yஎவ்விடம்? விதிக்க வல்ல ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே! கருத்துக்கள் உதிக்கும் இடம் எது? உயிர் ஒடுங்கும் இடம் எது? வாசியில் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 168 – உவமையில்லா பேரொளிக்கு

168. உவமையில்லா பேரொளிக்கு உருவுமானது எவ்விடம் ? உவமையாகி அண்டத்துள் உருவி நின்ற தெவ்விடம்? தவமதான பரமனார் தரித்து நின்ற தெவ்விடம் ? தற்பரத்தில் சலம் பிறந்து தங்கி நின்ற தெவ்விடம் ? உவமையில்லா பேரொளி என்றால், விறைப்பையில் விதையாக இருக்கும் அந்த உவமையில்லா போரொளி உயிர்பெற்று {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 167 – அங்கலிங்க பீடமாய்

167. அங்கலிங்க பீடமாய், ஐயிரண்டு எழுத்திலும், பொங்கு தாமரையினும் பொருந்துவார் அகத்தினும், பங்கு கொண்ட சோதியும், பரந்த அஞ்செழுத்துமே சங்கு நாத ஓசையும், சிவாயம் அல்லதில்லையே!. அங்க லிங்க பீடமாய் என்பது உயிர் அமர்ந்த பீடம் சிற்றம்பலம் (சிரசு), ஐயிரண்டு எழுத்திலும் என்றால் (நமசிவாய = 5 {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 166 – கோசமாய் எழுந்ததும்

166. கோசமாய் எழுந்ததும், கூடுறுவி நின்றதும், தேகமாய் பிறந்ததும், சிவாய அஞ்செழுத்துமே! ஈசனார் இருந்திடம், அநேக அநேக மந்திரம். ஆசனம் நிறைந்து நின்ற 51 எழுத்துமே. கோசமாய் எழுந்ததும், என்றால் விதையாக சுணங்கி இருந்த விதை, விதைப் பையிலிருந்து கோசமாக உயிராக எழுந்ததும், கருமுட்டையை ஊடுறுவி நின்றதும், {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 166 – கோசமாய் எழுந்ததும்

166. கோசமாய் எழுந்ததும், கூடுருவி நின்றதும், தேகமாய் பிறந்ததும், சிவாய அஞ்செழுத்துமே ! ஈசனார் அருந்திட, அநேக அநேக மந்திரம், ஆசனம் நிறைந்து நின்ற , ஐம்பத்தோரு எழுத்துமே ! ஆ காயம் , காற்று, வெப்பம், நீர் எனும் நான்கும் கோசமாய் உயிர் பெற்று எழுந்ததும், {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 165 – நாலொடாறு பத்து

165. நாலொடாறு பத்து மேல், நாலும் மூன்றும் இட்டபின், மேலும் பத்தும் ஆறுடன் , மேவி அண்ட தொன்றுமே! கூவி அஞ்செழுத்துலே, குரு விருந்து கூறிடில் தோலு மேனி நாதமாய் தோற்றி நின்ற கோசமே! பஞ்ச பூதங்களில் ஒன்று என்பது வெளி, இரண்டு என்பது காற்று, மூன்று {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 164 – சதுரம் நாலு

164. சதுரம் நாலு மறையும் இட்டு, தான தங்கி மூன்றுமே!.. எதிரான வாயுவாறு என்னும் வட்ட மேவியே. உதிரந்தான் மறைகள் எட்டும் என்னும் என் சிரசின் மேல்| கதிரதான காயத்தில் கலந்தெழுந்த நாதமே! நான்கு வகையான வேதியல்களாலும், எட்டு வகையான சக்திகளைக் கொண்டும் உருவாக்கப்பட்டவைதான், இந்த உடலின், {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 163 – ஓடி ஓடி

163. ஓடி ஓடி பாவிழைத்து உள்ளங்கால் வெளுத்ததும், பாவியான பூனை வந்து பாவிலே குதித்ததும், பணிக்கன் வந்து பார்த்ததும், பாரமில்லை என்றதும், இழையறுந்து போனதும், என்ன மாயம் ஈசனே ?. ஓடி ஓடி பாவிழைத்து உள்ளங்கால் வெளுத்ததும், என்றால் நெசவு தொழில் செய்பவர்கள் நூற்ற நூலை பாவாக {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 162 – கருத்தரிக்கும் முன்னெலாம்

162. கருத்தரிக்கும் முன்னெலாம், காயம் நின்ற தேயுவில். உருத்தரிக்கும் முன்னெலாம், உயிர்ப்பு நின்றது அப்புவில். அருள்தரிக்கும் முன்னெலாம் ஆசை நின்ற வாயுவில் திருக்கருத்துக் கொண்டத சிவாயம் என்று கூறுமே !. நம்மிடம் கேள்வி கேட்டுவிட்டு அவரே அதற்கு பதிலும் கூறுகிறார். கருத்தரிக்கும் முன்னரே நம் உடல் உருவாகி {…}

Read More