மூன்றாம் தமிழ்ச் சங்கத்தில் உருவாக்கிய பஞ்சாங்கத்தில் 5 அங்கங்கள் இருந்தன.
ஒன்று – கிழமை
இரண்டு – திதி
மூன்று – நல்சித்திரம் (நட்சத்திரம்)
நான்கு – யோகம்
ஐந்து – கரணம்
இவற்றில் கிழமை, திதி , நல்சித்திரம் மூன்றாம் தமிழ்ச் சங்க காலத்திற்கு முன்பிருந்தே புழக்கத்தில் இருந்தது தான். ஆனால் யோகமும் கரணமும் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு மூன்றாம் தமிழ்ச் சங்க காலத்தில் விவாதித்து அமைத்தனர்.
இதை நாம் முறையே வரிசைப்படி பார்ப்போம்
1. கிழமை
கிழமை என்பது இரண்டாம் தமிழ்ச் சங்க காலத்திற்கு முன்பிருந்தே முதல் தமிழ் சங்கத்திலேயே தோன்றி இருக்க வேண்டும். வெறும் கண்ணால் பார்க்கக் கூடிய கிரகங்களை நம் முன்னோர்கள் அறிந்து அவற்றின் ஓட்டத்தை வைத்து 7 கிரகங்களையும் மற்ற விண்மீன்களைக் காட்டிலும் வேகமாக நகர்வதை அவதானித்து இந்த 7 கிரகங்களும் நமது சூரிய குடும்பத்தைச் சேர்ந்தது என்பதனை முதல் தமிழ்ச் சங்கத்திலேயே விவாதித்து முடிவு செய்திருந்தார்கள்.
சூரியனை மையமாகக் கொண்டு 7 கிரகங்களும் சுற்றுகின்றன என நன்கறிந்து. நமது பூமியும் சூரியனைத் தான் சுற்றுகிறது என்பதனை புரிந்து கொண்டு, நமது கண்களுக்கு மாயையால் சூரியன் மேலெழவதாக தெரிந்தாலும், நமது பூமிக்கு பதிலாக சூரியனை ஒரு கிரகமாக வடித்தார்கள்.
நமது சூரிய குடும்பத்தில் உள்ள 7 கிரகங்களும் நடுவில் சூரியனும், சூரியனைச் சுற்றி முதல் வட்டப் பாதையில் புதனும், இரண்டாவதாக வெள்ளியும், மூன்றாவதாக பூமியும், பூமியைச் சுற்றி திங்களும், நான்காவதாக செவ்வாயும், ஐந்தாவது வியாழன் மற்றும் ஆறாவதாக சனி கோளும் இடையறாது சுற்றிக் கொண்டு இருப்பதாக முதலாம் தமிழ் சங்கத்தில் முடிவு செய்து இருந்தார்கள். அப்பொழது ராகுவையும் கேதுவையும் அறிய வேண்டிய தேவை இல்லாததால் அதைப் பற்றி யோசிக்கவில்லை. இப்படி ஏழு கிரகங்களையும் பாமர மக்களுக்கும் புரியவைக்கதான் கிழமையை உருவாக்கினார்கள்.
பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட பகுதியில் புதனும், வெள்ளியும், திங்களும் ஆக மூன்று கோள்கள் இருக்கின்றன. பூமிக்கு வெளியே அதாவது மேற்கே (மேலே) செவ்வாய் வியாழன், சனி ஆகிய மூன்று கோள்கள் உள்ளது. இதில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள கோள்கள் பெண் கோள்களாகவும், அதாவது பெண்களின் குணங்களை கொண்ட கோள்களாகவும், பூமிக்கு வெளியே உள்ள கோள்களை ஆண்கள் குணங்களாகவும் சித்தரித்து ஒரு புத்தாண்டிலிருந்து முதல் நாளை ஞாயிறு என ஒளி மிகுந்த நாளில் ஆரம்பித்து, அடுத்து ஒரு பெண் கிரகம் திங்களாகவும் அடுத்து ஒரு ஆண் கிரகம் செவ்வாயாகவும், அடுத்து ஒரு பெண் கிரகம் புதனாகவும் அடுத்து ஒரு ஆண் கோள் வியாழனாகவும், அடுத்து ஒரு பெண் கிரகம் வெள்ளியாகவும், அடுத்து ஒரு ஆண் கிரகம் சனி என வகைப் படுத்தி ஒரு வாரத்திற்கு 7 நாட்களாக அமைத்தார்கள்.
1.ஞாயிறு – நீர் வண்ணம்.
2.திங்கள் – நீலம்
3.செவ்வாய் – சிவப்பு
4.புதன் – மஞ்சள்
5.வியாழன் – வெள்ளை.
6. வெள்ளி – பச்சை.
7.சனி – கருப்பு.
என 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வரிசைப் படுத்தியுள்ளார்கள்.
இந்த வாரம் எனும் 7 நாட்களுக்கும் நம் மூச்சுக் காற்று நம் உடலில் 6 சக்கரங்களைக் கடந்து 7வது சக்கரமான பிரபஞ்ச ஆற்றலில் இணைவதையும் சம்பந்தபடுத்தி வாரம் முதல் தமிழ்சங்கத்திலேயே உருவாக்கப்பட்டு இருக்கிறது.
ஒரு நாளை 24 ஓரைகளாக்கி அதில் மூச்சுக் காற்று 7 சக்கரங்களை மூன்று முறை கடந்து அடுத்த நாள் காலை சூரிய உதயத்தில் எந்த சக்கரத்தில் மூச்சுக் காற்று இருக்குமோ அதை கிழமை ஆக்கி இருப்பதால் தான் இந்த வாரத்திற்கு 7 நாட்கள் என்பதை இந்த உலகில் உள்ள அனைவரும் ஏற்று இன்று வரை மாற்றாமல் உலகம் முழுவதும் அப்படியே பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். ஏனெனில் உலகம் முழுதும் வாழ்பவர்கள் குமரிக்கண்டம் நீருழியில் மூழ்கிய போது காவடியுடன் இலங்கை வரை நடந்து வந்து அங்கிருந்து நெய்தல் வழியாக புலம் பெயர்ந்த நம் உறவுகள் தான். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதன் பொருள் இதுதான்.
Tags: தமிழர்களின் விண்ணியல்
No Comments